Jio Prime சந்தா செலுத்தும் இறுதி நாள் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது?


Relaince Jio அறிவித்துள்ள Prime திட்டத்திற்கான சந்தாவை செலுத்துவதற்கானஇறுதி நாள் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


மும்பை:

Relaince Jio வாடிக்கையாளர்கள் தற்சமயம் பயன்படுத்தி வரும் புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் வாடிக்கையாளர்கள் Jio சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கென Jio Prime எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 31, ஆம் தேதிக்குள் Jio Prime திட்டத்தில் ரூ.99 செலுத்தி ஜியோ புத்தாண்டு சலுகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துக் கொள்ள முடியும்.
இந்நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் Jio Prime திட்டத்திற்கு பதிவு செய்யும் கால அவகாசம் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது

இதனால் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து ஜியோ சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்சமயம் வரை ஜியோ பிரைம் திட்டத்திற்கு 50 சதவிகித ஜியோ வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 10 கோடியை கடந்தது.

ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.99 செலுத்தியதும் ஜியோ பிரைம் திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இவற்றில் ரூ.303 கட்டணத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிறது. இத்துடன் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகின்றது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

How to Create Mobile Application? Details?

Facebook அறிமுகம் செய்ய இருக்கும் புதிய Exprees Wifi வசதி...!

WhatsApp Goupபில் Invite Link கை எப்படி Create செய்வது?